Wednesday, October 5, 2011

Astro-Vision Lifesign Mini - Free Astrology Software Download

indian astrology software free download
File size: 25.4 mb
Operating system requirements:
 Free Astrology Software Download - Astro-Vision LifeSign Mini
Astro-Vision LifeSign Mini இலவசமாக டவுன் லோடு செய்து கொள்ளும் வசதியை இந்த இணையதளம் வழங்கி உள்ளது. இது கீழ்க்காணும் மொழிகளை ஆதரிக்கிறத
Free Astrology Software in English
Free Astrology Software in Hindi
Free Astrology Software in Bengali
Free Astrology Software in Marathi
Free Astrology Software in Tamil
Free Astrology Software in Telugu
Free Astrology Software in Kannada
Free Astrology Software in Malayalam Free Astrology Software in
Download Click Here
File size: 25.4 mb

Operating system requirements:
MS-Windows 98 and above

Friday, June 3, 2011

உதயத்தில் இருந்து ஆருடம் எங்கு இருக்கின்றது என்று பலன்

உதயத்தில் இருந்து ஆருடம் எங்கு இருக்கின்றது என்று பலன்
1. கேள்வியாளர் தன்னைப்பற்றிய கேள்வியே கேட்பார். பிரச்சனைக்கு தீர்வு உண்டா? எப்போது? என்று கேட்பார்.

2. பணவரவு பற்றிய கேள்வி கேட்பார், கண்ணை பற்றி கேட்பார், வாக்கு, புதியன வருதல்.( மனைவியாக. குழந்தையாக ) புதிய நபர் வருகை பற்றி கேட்பார். ஷேர் மார்க்கெட். இளைய சகோதரத்தின் இடமாற்றம். குழந்தையின் தொழில் வெற்றி. தந்தையின் நோய். காலணிகள். கண். பண இருப்பு விலை மதிப்புமிக்க பொருள், தனக்கு குடும்பம் அமையவில்லையே போதிய வருமானம் இல்லாதது பற்றிகேட்பார். வரவேண்டிய பணம் எப்போது கிடைக்கும் என்று கேட்பார்.

3. சகோதரம் பற்றி கேட்பார். தைரியம், வீரியம் செய்வது பற்றி கேட்பார். வெற்றி பற்றிய கேள்வியே கேட்பார். அண்டை வீடுகள் பற்றிக்கேட்பார். சிறு தூரப் பயணம் செய்வது பற்றிக்கேட்பார். கடிதப் போக்குவரத்துகள் செய்வது பற்றிக்கேட்பார். எழுத்துத் துறை. தபால் நிலையம். முன்னேரிய அறிவியலின் அத்துனை தகவல் தொடர்பு சாதனங்களும் பற்றி கேட்பார். போன் கால்கள். வீடு விற்பனை பற்றியகேள்வி கேட்பார். வேலைக்காரர்கள். செய்திகள். பேரம் பேசுதல். பாகப்பிரிவினை செய்வது பற்றி கேட்பார். ஆரம்ப கல்வித் தடை. நிருபர்கள். புரோக்கர்கள்.

4. தாய்பற்றிய கேள்வியே கேட்பார். சுகம். குழந்தைக்கு வைத்தியம் செய்வது பற்றிக்கேட்பார். வீட்டுக்குப் பயன்படக்கூடிய இயந்திரங்கள்பற்றியகேள்வியே கேட்பார். வீடு வாசல்பற்றியகேள்வியே கேட்பார். மாடு. கன்றுகள். கல்லறைகள். சொந்த விவகாரம். இரகசிய வாழ்க்கை பற்றிய கேள்வியே கேட்பார். கற்பு பற்றியகேள்வியே கேட்பார். தோட்டம். பொதுக் கட்டிடங்கள். ஞாபகச் சின்னங்கள். விவசாயம். ஆரம்பக் கல்வி பற்றிய கேள்வியே கேட்பார். வியாபாரம். நீர் ஊற்றுக்கள். திருடி வைத்திருக்கும் பொருட்கள் (திருடப்பட்ட பொருட்கள் உள்ள இடம்). புதையல் பற்றிய கேள்வியே கேட்பார். ஆரம்ப நிலை சோதிடக்கல்விக் கல்வி. முதலீடு செய்வது பற்றிக் கேட்பார்.

5. குழந்தையைப்பற்றிய கேள்வியே கேட்பார்.குழந்தை உண்டா? எப்போது? என்றும்கேட்பார்.குழந்தை உற்பத்தி திறன்பாதிப்பு.குழந்தைக்கு தொந்தரவு பற்றிக்கேட்பார். பாட்டன். பாட்டிகள். பூர்வ புண்யம் பற்றிக்கேட்பார். மனம். எண்ணம். வம்சா வழி அத்துனையும் பற்றி கேட்பார்.காதலைப்பற்றி கேட்பார். சந்தோஷம் பற்றிக கேட்பார்.அதீர்ஷ்டம் பற்றி கேட்பார். யோகம் பற்றிக்கேட்பார். போட்டி. இஷ்ட தெய்வம். சிற்றின்பம். மந்திர உச்சாடனம் பற்றிக்கேட்பார். உபாசனை பற்றிக்கேட்பார். (இஷ்ட தெய்வம்) கற்பழிப்பு பற்றி கேட்பார். வழிபாடு. திருவிழாக் கோலங்கள். மன திருப்தி பற்றி கேட்பார். ஸ்டாக் எக்சேஞ்ச் சூதாட்டம் பற்றி கேட்பார்.

6. கடன்பற்றிய கேள்வியே கேட்பார். நோய்பற்றியகேள்வியே கேட்பார். வழக்கு பற்றிய கேள்வியே கேட்பார். ஜீரணம். ஊழியர். ஊழியம். வேலைக்காரர்கள் பற்றியகேள்வியே கேட்பார். சிறுதொழில். சிறிய வருமானத்தை தரக்கூடிய தொழில்கள் பற்றி கேள்வியே கேட்பார். வெற்றிக்குத் தடை பற்றிய கேள்வியே கேட்பார். தாய் மாமன். கஞ்சத்தனம். பேராசை. திருட்டு பற்றிய கேள்வியே கேட்பார். ஜெயில். மூத்த சகோதரத்தில் பிரச்சினை. வளர்ப்புப் பிராணிகள். வீட்டு மிருகங்கள் பற்றிய கேள்வியே கேட்பார். பிரச்சனைக்குதீர்வு உண்டா? எப்போது? என்றும்கேட்பார்.

7. திருமணம் உண்டா? எப்போது? என்றும் கேட்பார்.மனைவி பற்றிய கேள்வியே கேட்பார். சட்டப்படியான அங்கீகாரம் பற்றிய கேள்வியே கேட்பார். சமூகப் பழக்க வழக்கம். பரிமாரிக்கொள்பவர்கள். ஆயுளுக்குத் தொந்தரவு பற்றிய கேள்வியே கேட்பார். திருடனைப் பற்றிய விவரங்கள் பற்றிய கேள்வியே கேட்பார். பொதுக் கூட்டங்கள். வேலையாட்களின் பணம். பொது ஜனத் தொடர்பு. பற்றிய கேள்வியே கேட்பார் அபராதம் பற்றி கேள்வி கேட்பார். ஒரு பொருள் திரும்பிக் கிடைத்தல் பற்றிய கேள்வியே கேட்பார். வரவேண்டிய பணம் எப்போது கிடைக்கும் என்று கேட்பார். இரகசிய விரோதிகளால் தொந்தரவு பற்றிக்கேட்பார். காணாமல் போனது எப்போது கிடைக்கும் என்று கேட்பார்.

8. ஆயுள்பற்றி கேட்பார்.காணாமல் போனது பற்றிக்கேட்பார். அவமானம் பற்றிக்கேட்பார். கண்டம் பற்றிக்கேட்பார். மரணம் பற்றிக்கேட்பார். இயற்கையான மரணம் பற்றிக்கேட்பார். கெட்ட பயம். வளர்ப்பு பிராணிகளால் தொந்தரவு. வட்டி கட்டுதல் பற்றி கேட்பார். உதவிப் பணம். திடீர் அதிஷ்டம். தடை உயில். கெட்ட செயல். தானாக தொலைந்து போதல் பற்றிக்கேட்பார். வரதட்சணை பற்றிக்கேட்பார். சீர். மாங்கல்யம் பற்றி கேட்பார். காணாமல் போனது எப்போது கிடைக்கும் என்று கேட்பார். ஆப்ரேஷன் பற்றிக்கேட்பார். கசாப்பு கடைகள். மலக்கழிவிடம் பற்றி கேட்பார். கர்பப்பை பற்றி கேட்பார். வரவேண்டிய பணம் எப்போது கிடைக்கும் என்று கேட்பார். மரணமடைந்தவர்களைப் பற்றி கேட்பார்.

9. தந்தைபற்றி கேட்பார். மத ஆச்சாரம் பற்றிக்கேட்பார். குல வழக்கம் பற்றிக்கேட்பார். குருபற்றிக்கேட்பார்.உடனே பலம் தரும் தெய்வம். மதப்பற்று. மறுஉலக தொடர்பு. பெரியவர்கள். தூரத்து செய்திகள் பற்றிக்கேட்பார். திருமண மண்டபம். கலாச்சார விருப்பம். நீண்ட தூரப் பயணம் பற்றிக் கேட்பார். தொழில் விரயம் பற்றிக்கேட்பார். தெய்வ வழிப்பாட்டு இடம் பற்றி கேட்பார். தம்பியின் மனைவி. ஒன்றினை தியாகம் செய்தல். பணம் புரட்டுதல் பற்றிக்கேட்பார். ஜபம். உயர் கல்வி பற்றிக்கேட்பார். வெளிநாட்டுப் பயணம் பற்றிக்கேட்பார்.
10. தொழில் பற்றி கேட்பார். ஜீவனம் பற்றி கேட்பார். புகழ். கௌரவம் பற்றிக்கேட்பார். சமூக அந்தஸ்த்து. கர்மம். கருமாதி பற்றிக்கேட்பார். இறுதிச்சடங்கு பற்றிக்கேட்பார். புனித வழிபாடு. கூட்டத் தலைவர். குழந்தையின் நோய் பற்றிக்கேட்பார். மூத்த சகோதரத்தின் விரயம். தத்துக் குழந்தைகள் பற்றி கேட்பார். தீர்ப்பு பற்றிக்கேட்பார். மரணம் அடைந்தவர்களை பற்றி கேட்பார்.

11. லாபம் எப்போது கிடைக்கும் என்று கேட்பார்.மூத்த சகோதரம். லாபம் பற்றிக்கேட்பார். எதீர்பார்த்தது நன்மையில் முடிதல்பற்றிக்கேட்பார். நண்பர்கள். ஆசைகள் முழுமையாக எதீர்பார்ப்பின்றி தரும் இடம். ஆலோசகம். உதவி கிடைக்குமிடம் பற்றிக்கேட்பார். எல்லாவற்றிற்கும் வெற்றி. மருமகன். மருமகள். நீர்ப் பாசன வசதியுள்ள விவசாய நிலங்கள். அரசு வகை கூட்டுக் குழுக்கள் (சட்ட சபை. ஊராட்சி. நகராட்சி. நிரந்தர நட்பு. திட்டங்கள். வரவேண்டிய பணம் எப்போது கிடைக்கும் என்று கேட்பார்.
12. விரையம் ஆகப்போவதைக்காட்டுகிறது. வைத்தியசாலை பற்றிக்கேட்பார். நஷ்டம் ஆகப்போவதை காட்டுகிறது.

Sunday, May 29, 2011

இரத்த வங்கியும் முக்கியமும்....


இரத்த வங்கியின் முக்கியத்துவத்தை தேவைப்படும்போது உணரும் நிலையில் உள்ளதை விட யாருக்கேனும் இரத்தம் தேவை ஏற்பட்டால் அதற்கான வழிக்காட்டுதலாக நாம் அமைந்தால் மற்றவர்களுக்கும் நன்மை ஏற்படும் என்பதில் ஐயம் இல்லை. இது போன்று யாருக்கேனும் விபத்து, ஆபரேஷன் போன்ற காரணங்களினால் இரத்த தேவை ஏற்பட்டால் அதனை இந்த இணையத்தில் பதிவு செய்தால் குறிப்பிட்ட நேரத்திற்குள் நம்மை போன்ற சிலர் அதற்குண்டான வழிகளை தெரிவிப்பார்கள். நாமும் மற்றவர்களுக்கு உதவுவோம்.

Post your Blood Requirement---> Click Here

Thursday, May 19, 2011

உங்கள் ஜோதிடம்

தனிப்பட்ட உங்கள் கேள்வி

உங்கள் திருமணம் காதல் / நிச்சியக்க பட்டதா?
பொருளாதார நிலை
திருமண வாழ்க்கை
உங்களுக்கு சொந்த விடு வாங்கும் யோகம் உள்ளதா?
தொழில் மற்றும் வேலை
உங்கள் கல்வி நிலை
திருமணம் / காதல் பற்றிய கேள்வி உதாரணம்
உடல் நிலை
உங்கள் குழந்தைகளின் எதிர்காலம்
குரு பெயர்ச்சிக்கு பிறகு உங்கள் திருமண வாழ்க்கை
குரு பெயர்ச்சிக்கு பிறகு உங்கள் பொருளாதார நிலை
குரு பெயர்ச்சிக்கு பிறகு உங்கள் தொழில் மற்றும் வேலை
குரு பெயர்ச்சிக்கு பிறகு உங்கள் கல்வி நிலை
குரு பெயர்ச்சிக்கு பிறகு உங்கள் குழந்தைகளின் எதிர்காலம்
இங்கு உள்ள அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்க ரூ.500 மட்டுமே
தொடர்புகொள்ள வேண்டிய இ.மெயில் முகவரி : astrourlife@yahoo.in

Friday, April 29, 2011

குருப்பெயர்ச்சி பலன்கள் 2011 (விருச்சிகம்)


விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)

எந்தவொரு காரியத்திலும் இருவிதமான ஆதாயங்களை அடைய நினைக்கும் விருச்சிக ராசி நேயர்களே! குரு பகவான் வரும் 8-5-2011 முதல் 17-5-2012 வரை ருண ரோக ஸ்தானமான 6-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் தேவையற்ற பிரச்சினைகள், வம்பு, வழக்குகளை சந்திப்பீர்கள். முற்பாதியில் சனி 11-ஆம் வீட்டில் பலமாக சஞ்சாரம் செய்வதால் எதிலும் எதிர்நீச்சல் போட்டாவது ஏற்றத்தை அடைவீர்கள். எடுக்கும் காரியங்களிலும் வெற்றி கிட்டும். 6-6-2011-ல் ஏற்படவிருக்கும் சர்ப்பகிரக மாற்றத்தால், ராகு ஜென்ம ராசியிலும் கேது 7-ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்யவுள்ளனர். இதனால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகளும், கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகளும் உண்டாகும். இது மட்டுமின்றி, 15-11-2011 முதல் உங்களுக்கு ஏழரைச் சனியும் தொடங்கவுள்ளது. இதனால் எதிலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்துச் செயல்படுவதும், தொழில், வியாபாரம் போன்றவற்றில் புதிய முயற்சிகளில் கவனமுடனிருப்பதும் உத்தமம். உத்தியோகஸ்தர் களுக்கு தேவையற்ற இடமாற்றமும் வீண்பழிச் சொற்களை சுமக்கக் கூடிய சூழ்நிலையும் உண்டாகும். கொடுக்கல் - வாங்கலிலும் வீண்பிரச்சினைகளைச் சந்திப்பீர்கள். மனைவி, பிள்ளைகளால் மருத்துவச் செலவுகள் ஏற்படும்.

ஆரோக்கியம்:

உங்கள் ஆரோக்கியம் அடிக்கடி பாதிக்கும். கவனமாக இருக்கவும். உங்கள் குடும்பத்தில் மனைவியின் உடல்நிலையும் பாதிக்கும். வீண் மருத்துவச் செலவுகள் ஏற்படும். சரியான உறக்கமில்லாத நிலைகள் உண்டாகும். வீண் அலைச்சலைத் தவிர்ப்பது உத்தமம்.

பொருளாதார நிலை:

சரிவும் சங்கடமும் பெருகிக் காணப்படும். எதிர்பார்க்கும் தகவல்களில் அனுகூலமற்ற பதிலை அடைவீர்கள். முயற்சிகள் சாதகமற்று எதிர்மறைப் பலன்களை உண்டாக்கும். கொடுக்கல் - வாங்கலைத் தவிர்ப்பது உத்தமம். புதிய கடன்கள் வாங்கும் நிலை உண்டாகும்.

குடும்பம்:

கணவன் - மனைவி இடையே சிறுசிறு சண்டை, சச்சரவுகள் ஏற்படும். சந்தோஷம் இருக்காது. வீண் வாதங்களும் பிடிவாதங்களும் சங்கடத்தைக் கொடுக்கும். கடன் தொல்லை ஏற்படும். புத்திர வழியில் வீண் மனக்குழப்பம் ஏற்பட்டு விலகும். புத்திரர்களால் குடும்பத்தில் ஒரு நன்மையும் ஏற்படாது.

உத்தியோகஸ்தர்களுக்கு:

எதிர்பாராத சிக்கல்கள் ஏற்படும் என்பதால் நெருங்கியவர்களிடம் எச்சரிக்கை தேவை. மேலதிகாரிகளின் ஆதரவுகள் குறையும். எப்போது பார்த்தாலும் கடுகடுப்பாகக் காணப்படுவீர்கள். உடல்நலமும் ஒத்துழைக்காது. வேலை தேடுபவர்களுக்கு நிலையான வேலை அமையாது.

தொழிலாளர்களுக்கு:

செய்கின்ற தொழிலில் திடீர் சரிவு, மந்த நிலை உண்டாகும். எதிலும் நிதானமாகவும் முன்எச்சரிக்கையுடனும் செயல்படுபவதன் மூலம் வரக்கூடிய ஆபத்துகளைத் தவிர்க்கலாம். புது முயற்சிகள் தடையுடன் நிறைவேறும்.

பெண்களுக்கு:

உடல்நலம் பாதிக்கும். வயிற்றுக் கோளாறுகளும் பித்த சம்பந்த மான நோயும் தோன்றிடும். இதனால் மருத்துவச் செலவுகள் இருக்கும். திருமணமானவர்களுக்கு குடும்ப வாழ்வில் நிம்மதி இருக் காது. கணவன் - மனைவி ஒற்றுமை சுமாராக இருக்கும். திருமணம் போன்ற சுப காரியம் நடைபெற தடை, தாமதம் உண்டாகும்.

கலைஞர்களுக்கு:

உங்களுக்கு தொழிலில் கடும் போட்டி உண்டு. அதை மிகவும் எளிதாக முறியடிக்கும் வல்லமையும் பெற்றிருப்பீர்கள். செல்வம், செல்வாக்கு சுமாராகவே இருக்கும். மக்கள் மத்தியில் உங்கள் புகழ் சற்று குறையப் பெறும். பொதுவாக எதிர்நீச்சல் போட்டு ஏற்றம் பெறும் அமைப்பைப் பெறுவீர்கள்.

விவசாயிகளுக்கு:

உங்களுக்கு விளைச்சல் குறைவாக இருக்கும். சிலருக்கு விவசாயக் கருவிகள் பழுது அடைந்து அதன்மேல் பண விரயம் உண்டாகும். அரசு வழியில் எடுக்கும் முயற்சிகள் தடையுடன் வெற்றி கொடுக்கும். புழு, பூச்சி தொல்லையால் பயிர்ச் சேதம் உண்டாகும்.

இளைஞர்களுக்கு:

தாழ்வான நிலை என்றாலும் எதிர்காலப் பலன்கள் நன்றாக இருக்கும். சோதனையைக் கண்டு அஞ்சாதீர்கள். பெரிய வாய்ப்பு களால் உயர்வு கிடைக்காது. வாய்ப்புகள் இருந்தால் சிறு வேலை யாக இருந்தாலும் எதிர்காலத்தில் நல்ல நிலையை அடைய முடியும்.

மாணவர்களுக்கு:

கவ்வியில் ஆர்வம் குறையும். கடின உழைப்பினை மேற்கொண் டால் ஓரளவு சாதகமான பலனை அடைய முடியும். தேர்வுகளில் மதிப்பெண்களை கஷ்டப்பட்டு பெறும் நிலை ஏற்படும். பெற்றோர், ஆசிரியர்கள் ஆதரவு ஓரளவு கிடைக்கும்.

குரு அஸ்வினி நட்சத்திரத்தில் கேது சாரத்தில்
8-5-2011 முதல் 17-7-2011 வரை சஞ்சாரம்

உங்களின் தேகநலனில் அதிக கவனம் செலுத்த வேண்டும். புத்திர வழியிலும் மருத்துவச் செலவுகள் உண்டாகும். மகிழ்ச்சி குறையும். எடுத்த காரியம் நிறைவேற கடுமையான முயற்சிகள் கையாளப்பட வேண்டும். சுறுசுறுப்பும் உண்மையான உழைப்பும் கொண்டவர்கள் ஓரளவு கஷ்ட நிலைமையைச் சமாளிப்பீர்கள். வாழ்வில் முன்னேற வேண்டும் என்ற துடிப்புடன் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் பின்னோக்கியே இழுக்கும். உத்தியோகம் மற்றும் குடியிருக்கும் இல்லத்தில் இருந்து வெளியேறி வேறு இடம் செல்லும் நிலை உண்டாகும். சக ஊழியர்களின் மனிதாபிமானமற்ற நடத்தைகளும் வஞ்சக சூழ்ச்சிகளும் கவலையை உண்டாக்கும். எனவே, மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. எதிலும் நிதானமாகச் செயல்பட வேண்டும்.

குரு பரணி நட்சத்திரத்தில் சுக்கிரன் சாரத்தில்
18-7-2011 முதல் 30-8-2011 வரை சஞ்சாரம்

உங்கள் தேக ஆரோக்கியம் சுமாராகவே இருக்கும். மருத்துவச் செலவுகள் சிறிது குறைந்து காணப்படும். நிறைய பொருள் வரவு வந்தபடியே இருக்கும். செலவுகள் ஏற்பட்டபடியே இருக்கும். இதனால் சிறிது பற்றாக்குறையும், கடன் வாங்குகின்ற நிலையும் உண்டாகும். குடும்ப வாழ்வில் நிம்மதி இருக்காது. காரியத் தடைகள் இருந்து கொண்டே இருக்கும். கணவன் - மனைவி இடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் உண்டாகும். புத்திர வழியில் செலவுகள் ஏற்படும். அரசு சம்பந்தப்பட்ட வேலைகள் சிறுசிறு தடையைக் கொடுக்கும். தொழில் ரீதியாக சிலருக்கு இட மாற்றம் உண்டாகும். தேவையில்லாத பிரச்சினை ஏற்படும். மாணவர்கள் கல்வியில் சுறுசுறுப்பாகச் செயல்பட்டு அதிக மதிப்பெண்களைப் பெறுவார்கள். விவசாயிகளுக்கு விளைச்சல் திருப்தியாக இருந்தாலும் எதிர்பார்த்த மகசூல் கிடைக்காது.

குரு வக்ர கதியில்
31-8-2011 முதல் 25-12-2011 வரை சஞ்சாரம்

உங்கள் உடல்நலம் அற்புதமாக இருக்கும். செல்வம், செல்வாக்கு, புகழ், பெருமைகள் யாவும் கூடுதலாகும். சுபகாரியம் செய்யும் முயற்சியில் பெரும் வெற்றியினைப் பெறுவீர்கள். சிலருக்கு பிள்ளைப் பேறு ஏற்படும். தொழில்ரீதியாக தூரப் பயணம் செல்லக் கூடிய அமைப்பும் அதன் மூலம் ஆதாயமும் உண்டாகும். வீடு வாங்கும் முயற்சிகள் வெற்றியைக் கொடுக்கும். வியாபாரிகளுக்கு நல்ல அபிவிருத்தியும் மேன்மையும் உண்டாகும். கொடுக்கல் - வாங்கலில் லாபகரமாக இருக்கும். குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சிகரமான காரியங்கள் நடைபெறும். அரசு வழியில் எதிர்பார்த்த காரியம் லாபகரமாக இருக்கும். கலைஞர் களுக்கு வாய்ப்புகள் அதிகரிக்கும். அரசியல்வாதிகளின் பெயர், புகழ் யாவும் உயரும்.

குரு அஸ்வினி நட்சத்திரத்தில் கேது சாரத்தில்
26-12-2011 முதல் 2-3-2012 வரை சஞ்சாரம்

உங்களின் தேகநிலை பாதிக்கும். எதிர்பார்த்த தனவரவுகள் கைக்கு கிடைக்காமல் தாமத நிலை ஏற்படும். எதிலும் விரயமான நிலையும் மன அமைதியை பாதிக்கக் கூடியதாகவும் அமையும். உங்களுக்கு தொழில்ரீதியாகவும் பொருள்ரீதியாகவும் சிற்சில சங்கடங்களை உண்டாக்கிடும். கொடுக்கல் - வாங்கலில் சில சிக்கல்களை ஏற்படுத் தும். கணவன் - மனைவி இடையே வாக்குவாதங்களும் சண்டை சச்சரவுகளும் ஏற்பட்டு மறையும். வெளியூர் பயணங்கள் அனுகூலத் தைக் கொடுக்காது. திருமணம் போன்ற சுபமான நல்ல காரியங்கள் யாவும் தள்ளிப்போகும். நண்பர்களும் உறவினர்களும் பகைவர் களாக மாறும் நேரம் என்றால் மிகையாகாது. மாணவர்கள் எவ்வளவு தான் கஷ்டப்பட்.டு படித்தாலும் கல்வியில் ஏற்றம் பெற முடியாத நிலையினை உண்டாக்கும். கலைஞர்கள் தற்போது பெரிய பெரிய போட்டிகளைச் சந்திக்கின்ற நிலையைப் பெறுவார்கள்.

குரு பரணி நட்சத்திரத்தில் சுக்கிரன் சாரத்தில்
3-3-2012 முதல் 2-5-2012 வரை சஞ்சாரம்

தேக ஆரோக்கியம் பாதிக்கும். உங்களுக்கு வீணான அலைச்சல், உடன் இருப்பவருடன் விரோதம் போன்ற அனுகூலமற்ற பலன்கள் உண்டாகும். குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். பொருள் வரவில் மிகவும் மந்தமான நிலை ஏற்படும். கணவன் - மனைவி இடையே கருத்து வேறுபாடு அதிகமாகி சண்டை, சச்சரவுகள் காணப்படும். வெளியூர் பயணங்கள், தேவையில்லாத அதிக அலைச்சலை உண்டாக்கும். எடுக்கின்ற காரியங்கள் யாவும் சற்று தாமதம், தடையுடன் முடிவடையும். கூட்டுத் தொழிலினால் அதிக சங்கடமும் பகைமையும் உண்டாகும். பொருள் வரவில் தட்டுப்பாடான நிலை ஏற்படும். ஸ்பெகுலேஷனால் தன விரயங்கள் ஏற்படும். மங்கையருக்கு சுபகாரியம் நடக்க தடை ஏற்படும். வியாபாரிகளுக்கு அரசு உதவிகள் கிடைக்க தாமதமாகும். மாணவர்கள் எவ்வளவு படித்தாலும் நினைத்த மதிப்பெண்களைப் பெற முடியாது.

குரு கிருத்திகை நட்சத்திரத்தில் சூரியன் சாரத்தில்
3-5-2012 முதல் 17-5-2012 வரை சஞ்சாரம்

உங்கள் தேக ஆரோக்கியம் சுமாராக இருக்கும். மனைவியின் தேக ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். பொருள் வரவில் மந்தமான நிலைகளும் சிறுசிறு கருத்துவேறுபாடுகளும் சண்டை, சச்சரவு களும் உண்டாகியபடியே இருக்கும். புத்திர வழியினாலும் சிறிது மனவருத்தம் உண்டாகும். எதைக் கண்டும் அஞ்சாத மன உரம் வேண்டும். மாணவர்கள் எதையுமே தைரியமாகச் செய்ய வேண்டும். எதிர்நீச்சல் போட்டால்தான் ஏற்றம் பெற முடியும். எதிலும் ஈடுபடும் போது அதிக கவனம் தேவையாகும். சொந்த முயற்சியினால் படிப்படியான ஏற்றம் உண்டாகும். ஸ்பெகுலேஷன் சுமாரான நற்பலன்களையே ஏற்படுத்தும். கணவன் - மனைவி இடையே உறவு முறை சுமாராகத்தான் இருக்கும். தேவையில்லாத பயணத்தால் அலைச்சல்கள் வரும். கலைஞர்களும் மாணவர்களும் மிகவும் அக்கறையுடன் செயல்படுவது நல்லது.

விசாகம் 4-ஆம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு:

உங்களிள் தேகநலன் சிறிது பாதிக்கும். எடுக்கும் முயற்சியில் தடை, தாமதம் ஏற்படும். புத்திர வழியில் தேவையற்ற செலவுகள் உண்டாகும். பிறருக்கு வாக்குறுதி தருவதைத் தவிர்க்க வேண்டும். பயணங்களால் அலைச்சல் ஏற்படும். கணவன் - மனைவி இடையே சுமாரான ஒற்றுமை நிலவும். பொருள் வரவில் மந்தநிலை இருக்கும். கூட்டுத் தொழிலில் நிதானமாகச் செயல்பட வேண்டும்.

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு:

உங்களுடைய கஷ்டங்கள் படிப்படியாகக் குறையும். குடும்ப வாழ்வில் சிறிது மனநிம்மதிக் குறை ஏற்படும். பொருளாதாரரீதியாக தனவரவு திருப்தியாக இருக்காது. கணவன்-மனைவி ஒருவருக் கொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. புதிய முயற்சிகள் சிறிது தடை கொடுத்து வெற்றியைக் கொடுக்கும். அரசியல்வாதிகள், கலைஞர்கள் எதிலும் நிதானமாகச் செயல்படுவது நல்லது. மாணவர் களின் கல்வியில் மந்தநிலை நீங்கி ஓரளவு முன்னேற்றம் உண்டாகும்.

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு:

உங்களது தேகநிலையில் சிறுசிறு பாதிப்புகளைக் கொடுக்கும். தொழில், வியாபாரத்தில் போட்டியும் பொருள் வரவில் மந்தமும் இருக்கும். மாணவர்கள் கல்வியில் கவனம் தேவை. பெண்கள் நினைத்த காரியம் தாமத பலனைக் கொடுக்கும். கமிஷன் ஏஜென்சி, காண்ட்ராக்ட் போன்றவை லாபம் தராது. கூட்டுத் தொழில் சிறிது ஏற்றம் தரும். புது முயற்சியில் நிதானம் தேவை.

அதிர்ஷ்டம் அளிப்பவை:

அதிர்ஷ்ட தேதி : 5, 9, 14, 18, 23, 27.
அதிர்ஷ்ட கிழமை : செவ்வாய், புதன்.
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு.
அதிர்ஷ்ட கல் : பவளம்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு.
அதிர்ஷ்ட தெய்வம் : முருகன்.

பரிகாரம்:

இந்த குருப்பெயர்ச்சியால் குரு பகவான் 6-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பது சாதகமற்ற அமைப்பு என்பதால் வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்திக்கு பாலாபிஷேகம் செய்வது, மஞ்சள் நிற வஸ்திரமும் பூக்களும், கொண்டைக் கடலை மாலையும் சாற்றி அர்ச்சனை செய்வது உத்தமம். ராகு, கேது 1, 7-ல் சஞ்சரிப்பதால் துர்க்கை வழிபாடு, விநாயகர் வழிபாடு மேற்கொள்வது உத்தமம். 15-11-2011 முதல் ஏழரைச் சனி தொடங்கவுள்ளதால் சனிக்கு பரிகாரம் செய்வது, திருநள்ளாறு சென்று வருவது நல்லது.

குருப்பெயர்ச்சி பலன்கள் 2011 (துலாம்)

துலாம்
(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)

பிறருடைய குணங்களைத் தெளிவாக எடை போடக் கூடிய துலா ராசி நேயர்களே! உங்களுக்கு ஏழரைச் சனியால் தேவையற்ற பிரச்சினைகளும் சோதனைகளும் இருந்தாலும் வரும் 8-5-2011 முதல் 17-5-2012 வரை குரு பகாவன் சமசப்தம ஸ்தானமான 7-ல் சஞ்சாரம் செய்யவிருப்பதால் பண வரவில் இருந்த பற்றாக் குறைகள் விலகும். குடும்பத்தில் தடைப்பட்ட திருமண சுப காரியங்கள் தடபுடலாக நிறைவேறும். பொன்பொருள் சேர்க்கைகளும், சிலருக்கு ஆடை, ஆபரணம் வாங்கக் கூடிய யோகமும் உண்டாகும். பூமி, மனை, வண்டி, வாகன சேர்க்கைகளும் ஏற்படும். 6-6-2011-ல் ஏற்படவுள்ள சர்ப கிரக மாற்றத்தால் ராகு 2-லும் கேது 8-லும் சஞ்சரிக்க இருப்பதால், குடும்பத்திலுள்ளவர்களிடம் விட்டுக் கொடுத்து நடப்பதும் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதும் நல்லது. சிலருக்கு புத்திர பாக்கியமும் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபத்தைக் காண முடியும். உத்தியோகஸ்தர்களுக்கும் கௌரவமான உயர்வுகள் கிட்டும். வெளி யூர், வெளிநாடுகளுக்குச் செல்லக் கூடிய யோகமும் உண்டாகும். சனி துலா ராசிக்கு கேந்திர திரிகோணாதிபதியாகி யோக காரகன் என்பதால் பெரிய கெடுதிகள் ஏற்படாது என்றாலும் எதிலும் சிந்தித்துச் செயல்படுவது நல்லது.

ஆரோக்கியம்:

உங்கள் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். கடந்தகாலத்தில் இருந்த மருத்துவச் செலவுகள் குறைந்து மனநிம்மதி உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களின் நலமும் ஆரோக்கியமாகவே இருக்கும். உங்களின் சோதனைகள் அனைத்தும் விலகி குடும்பத்தில் சந்தோஷம் உண்டாகும்.

பொருளாதார நிலை:

கொடுக்கல் - வாங்கலில் நன்மை ஏற்படும். பொருளாதார ரீதியாக முன்னேற்றமும் உண்டாகும். எதிர்பாராத பண வரவு உண்டாகி பொன்பொருள் வாங்கும் யோகம் உண்டாகும். குடும்பத் தில் சில அனுகூலப் பலன்கள் பொருளாதாரரீதியாக உண்டாகும்.

குடும்பம்:

கணவன் - மனைவி ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். எதிரி களின் பலம் குறைந்து உங்கள் பலம் கூடும். உறவினர்களும் நண்பர் களும் சாதகமாக இருப்பார்கள். குடும்பத்தில் இருந்து வந்த கடன் தொல்லைகள் மறையும். எதிர்பாராத காரிய சாதனைகளைச் செய்வீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு:

பெரிய அதிகாரிகளின் அன்புக்குப் பாத்திரமாவீர்கள். சிலருக்கு பதவி உயர்வு, சிலருக்கு வேண்டிய இடத்திற்கு மாறுதல் போன்ற நற்பலன்கள் யாவும் உண்டாகி பூரிப்பை ஏற்படுத்தும். அடிக்கடி பயணங்கள் உண்டாகி அனுகூலமும் ஆதாயமும் மேலோங்கும். வேலைக்கு முயற்சி செய்தால் நல்ல நிலையான வேலை கிடைக்கும்.

தொழிலாளர்களுக்கு:

பழைய கடன்கள் பைசலாகும். அரசு சலுகைகள் உதவிகள் எதிர் பார்த்த வண்ணம் கிடைக்கும். வேலை இதுவரை இல்லாதவர் களுக்கு வேலை கிடைக்கும். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும். கட்டிட துறையில் இருப்போருக்கு தொடர்ந்து வேலை செய்யும் யோகம் கிட்டும். இதனால் தன வரவு அதிகமாகும்.

பெண்களுக்கு:

உங்களுக்கு சாதகமான காலமாகும். குரு பலம் மிகவும் பிரமாத மாக உள்ளது. எனவே நீங்கள் திருமண முயற்சியில் ஈடுபடலாம். கணவன் மற்றும் உற்றார் - உறவினர்களிடம் நல்ல பெயர் கிடைக்கப் பெறும். புத்திர வழியில் சந்தோஷமும் உண்டாகும். புதிய முயற்சிகள் அனுகூலமாக இருக்கும். ஆடை, ஆபரணச் சேர்க்கை அற்புதமாகவே அமையும்.

கலைஞர்களுக்கு:

அதிர்ஷ்ட தேவதை உங்களை நோக்கி வரக்கூடிய காலம் வந்துவிட்டது. தொழில்ரீதியாக மீண்டும் எழுச்சி மேலோங்கும். வீடு, வண்டி, வாகனம் போன்றவை வாங்கும் உன்னதமான அமைப்பு ஏற்படும். மக்கள் ஆதரவு கிடைக்கும். அரசாங்க வழியில் நற்பலன் உண்டாகும்.

விவசாயிகளுக்கு:

நன்செய் மகசூலில் நல்ல செழிப்பு ஏற்படும். ஆழ்கிணறு எடுப்பது மூலம் ஜலப் பிராப்தி கிடைக்கப் பெறும். கால்நடை சேர்க்கை மூலம் தன வரவு சிறப்பாக இருக்கும். அரசு வழியில் அனுகூலம் உண்டாகும். பழவகை, பருத்தி பயிர் செய்வோருக்கு நல்ல வருமானம் கிடைக்கப் பெறும்.

இளைஞர்களுக்கு:

உங்களுக்கு பொருள், தன வரவில் மிகவும் திருப்தியான நிலை ஏற்படும். வெற்றிமேல் வெற்றி உண்டாகும். வெளிவட்டாரப் பழக்கம் சாதகமான பலனைத் தரும். சிலருக்கு அசையா சொத்து வாங்கும் யோகம் ஏற்படும்.

மாணவர்களுக்கு:

கல்வியில் இருந்த மந்தநிலை நீங்கி நல்ல முன்னேற்றம் அமையப் பெறும். கல்வியில் வெற்றிமேல் வெற்றி கிட்டும். அதிக மதிப் பெண்கள் பெற்று பெற்றோர்களிடமும் ஆசிரியர்களிடமும் பாராட்டு பெறும் அமைப்பு உண்டாகும். அரசு வழியில் கணிச மான உதவியை சிலர் பெறும் நிலை உண்டாகும்.

குரு அஸ்வினி நட்சத்திரத்தில் கேது சாரத்தில்
8-5-2011 முதல் 17-7-2011 வரை சஞ்சாரம்

உங்களுக்கு எல்லா விதத்திலும் மேன்மையையும் அனுகூலத் தையும் உண்டாக்கித் தரும். உங்கள் உடல் ஆரோக்கியம் மிக திருப்திகரமாக இருக்கும். தொழில்ரீதியாக ஏற்றங்கள் உண்டாகக்கூடிய நிலைகள் ஏற்படும். குடும்பத்தில் கணவன் - மனைவி ஒற்றுமை மிகவும் சிறப்பாக இருக்கும். பெண்களுக்கு புத்திர வழியில் பூரிப்பும் மகிழ்ச்சியும் ஏற்படும். திருமணமாகாத வர்களுக்கு திருமணம் கைகூடி மன மகிழ்வை ஏற்படுத்தும். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த லாபங்கள் உண்டாகும். மாணவர்கள் கல்வியிலும் விளையாட்டிலும் சிறப்பான சாதனை புரிவார்கள். கலைஞர்கள் சிறப்பான வாய்ப்புகளால் நல்ல தன வரவைப் பெறுவார்கள். அரசியல்வாதிகள் கௌரவமான பதவிகள் பெறுவார்கள். விவசாயத்தில் விளைச்சல் பெருகும்.

குரு பரணி நட்சத்திரத்தில் சுக்கிரன் சாரத்தில்
18-7-2011 முதல் 30-8-2011 வரை சஞ்சாரம்

உங்கள் தேகநலன் சிறப்பாகவே இருக்கும். உங்கள் மனதில் உற்சாகமும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். எதிர்பார்த்த உத்தியோக உயர்வுகள் கைகூடும். இல்லத்தில் புத்திரப் பேறு உண்டாகி மன மகிழ்ச்சி உண்டாகும். சிலருக்கு உயர் அதிகாரி, அமைச்சர் போன்ற பதவிகள் கிடைக்கும். அரசியல்வாதிகளின் பெயர், புகழ், செல்வம், செல்வாக்கு யாவும் கூடும். குடும்பத்தில் கணவன் - மனைவி ஒற்றுமை பெருகும். தொழில்ரீதியாக பெரிய அளவில் முதலீடு செய்து லாபத்தைப் பெருக்குவீர்கள். கூட்டுத் தொழில், கமிஷன் ஏஜென்சி, காண்ட்ராக்ட் போன்றவற்றில் அபரிமிதமான பலன்களை உண்டாக்கும். நண்பர்கள், உறவினர்கள் சாதகமாக இருப்பார்கள். சிலருக்கு தூர தேசப் பயணங்கள் அமையும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றிமேல் வெற்றி கிட்டும். உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியும் குதூகலமும் உண்டாகும். கலைஞர்களுக்கு வாய்ப்புகள் பெருகும்.

குரு வக்ர கதியில்
31-8-2011 முதல் 25-12-2011 வரை சஞ்சாரம்

உங்களின் தேகநலனில் கவனம் தேவை. குடும்ப வாழ்வில் கணவன் - மனைவி இடையே ஒற்றுமை குறையும். தேவையில்லாத அலைச்சலையும், டென்ஷனையும், விரயத்தையும் உண்டாக்கிக் கொடுக்கும். குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். எதிலும் எச்சரிக்கையாகச் செயல்படுவது நல்லது. பொருளாதார ரீதியில் பற்றாக் குறைகள் ஏற்பட்டு அதனால் புதிய கடன்கள் வாங்கும் நிலையும் உண்டாகும். அரசு வழியில் கெடுபிடிகள் அதிகம் உண்டாகும். அரசாங்க ஊழியர்களுக்கு விருப்பமில்லாத மாற்றத்தைக் கொடுக்கும். கூட்டுத் தொழிலில் சங்கடங்களும் பொரு ளாதார நெருக்கடியும் உண்டாகும். எந்த புதிய முயற்சியும் தோல்வி யைக் கொடுக்கும். செய்கின்ற தொழில், வியாபாரத்தில் பெரிய முதலீடு செய்வதைத் தவிர்க்க வேண்டும். தேவையற்ற அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது.

குரு அஸ்வினி நட்சத்திரத்தில் கேது சாரத்தில்
26-12-2011 முதல் 2-3-2012 வரை சஞ்சாரம்

உங்கள் முயற்சிகள் பரிபூரண வெற்றியை உண்டாக்கித் தரும். வாழ்வில் மகிழ்ச்சியும் குதூகலமும் அதிகமாகும். தேக ஆரோக்கியம் பலப்படும். குடும்பத்தில் அபரிமிதமான செல்வச் சேர்க்கை உண்டாகும். சோதனைகள் குறையும். அரசாங்க வகை யில் உதவி மற்றும் ஆதரவுகள் பெருகும். குடும்பத்தில் கணவன் - மனைவி உறவு நன்றாக இருக்கும். புத்திர வழியில் சந்தோஷம் ஏற்படும். தொழில்ரீதியாக எதிர்பார்த்த பதவி உயர்வு மற்றும் இட மாற்றங்கள் உண்டாகும். சிலருக்கு தூர தேசப் பயணங்கள் அமையும். வெளியில் இருந்து வரவேண்டிய தொகைகள் சிலருக்கு திடீரென்று வந்துசேரும். மாணவர்களில் சிலருக்கு வெளிநாடு சென்று படிக்கும் யோகம் கிட்டும். கமிஷன் ஏஜென்சி, காண்ட்ராக்ட் போன்றவை ஏற்றமான பலன்களை ஏற்படுத்தும்.

குரு பரணி நட்சத்திரத்தில் சுக்கிரன் சாரத்தில்
3-3-2012 முதல் 2-5-2012 வரை சஞ்சாரம்

உங்களின் உடல் ஆரோக்கியம் மிகவும் சிறப்பாகவே இருக்கும். அரசியல்வாதிகளுக்கு ஏற்றமும் உயர்வும் உண்டாகும். உங்கள் செல்வம், செல்வாக்கு, புகழ், பெயர், பெருமை யாவும் இக்காலத்தில் மிகச் சிறப்பாகவே இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு திடீர் தனச் சேர்க்கை, லாபம் போன்றவை ஏற்படும். குடும்பத்தில் சேமிப்பு நிலை பெருகும். கணவன் - மனைவி உறவு கலகலப்பாகக் காணப்படும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் நற்பெயரும் பெற்றோர்களுக்குக் கிடைக்கும். பொருளாதாரம் பல்வேறு வகையில் பெருகும். மாணவர்கள் கல்வியில் சாதனை படைத்து பரிசுகளைப் பெறுவர். கொடுக்கல் - வாங்கல் அனுகூலமாக இருக்கும். பெண்களுக்கு ஆடை, ஆபரணச் சேர்க்கை அற்புதமாகவே அமையும். சிலருக்கு ஸ்திர சொத்துச் சேர்க்கை உண்டாகும்.

குரு கிருத்திகை நட்சத்திரத்தில் சுக்கிரன் சாரத்தில்
3-3-2012 முதல் 2-5-2012 வரை சஞ்சாரம்

இக்காலத்தில் உங்களின் தேகநிலை அற்புதமாக இருக்கும். திடீர் பண வரவு ஏற்படும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை காணப்படும். மன நிம்மதியும் மகிழ்ச்சியான நிலையும் உண்டாகும். தொழில் ரீதியாக இருந்து வந்த சங்கடங்கள் யாவும் குறையும். வெளியூர்ப் பயணங்களால் அனுகூலமும் ஆதாயமும் உண்டாகும். குடும்பத்தில் இருந்து வந்த மருத்துவச் செலவுகள் இனி இருக்காது. புத்திர வழியில் பூரிப்பும் பெருமையும் உண்டாகும். நெருங்கிய உறவினர் களால் நன்மை ஏற்படும். அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வும் அதனால் விரும்பிய இடத்திற்கு மாற்றமும் கிடைக்கும். மாண வர்கள் ஏற்றமான நிலைகளில் காணப்படுவார்கள். அரசியல் வாதிகளுக்கும் கலைஞர்களுக்கும் விரும்பிய செயல்கள் ஈடேறும்.

சித்திரை 3, 4-ஆம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு:

உங்களின் தேக ஆரோக்கியம் சிறப்பாகவே இருக்கும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் சிறப்பாகக் கை கூடி மன மகிழ்வை ஏற்படுத்தும். கொடுக்கல் - வாங்கல் யோகமாக இருக்கும். கமிஷன் ஏஜென்சி, காண்ட்ராக்ட் போன்றவை ஏற்றம் தரும். வியாபாரத்தில் பெரிய அளவு முதலீடுகளைப் பயன்படுத்தி லாபத்தைப் பெருக்குவீர்கள். பெண்களுக்கு எதிர்பாராத தன வரவினால் மகிழ்ச்சி உண்டாகும்.

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு:

தேகநிலை அற்புதமாக இருக்கும். குடும்பத்தில் கணவன் - மனைவி ஒற்றுமை பெருகும். புத்திர வழியில் பூரிப்பும் பெருமையும் உண்டாக்கும். பெண்கள் நினைத்த காரியம் வெற்றியைக் கொடுக் கும். கூட்டுத் தொழிலில் ஒற்றுமை ஏற்பட்டு உற்பத்தி பெருகும். கலைஞர்களின் செல்வம், செல்வாக்கு, பெயர், புகழ் யாவும் கூடும். மாணவர்கள் கல்வியில் சிறப்பான சாதனை புரிவார்கள். அரசியல் வாதிகளுக்குப் புதிய பொறுப்புகள் வந்துசேரும்.

விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு:

எடுக்கும் காரியம் யாவும் வெற்றிமேல் வெற்றியை உண்டாக்கும். குடும்பத்தில் தன வரவும் பொருள் வரவும் சிறப்பாகவே இருக்கும். பெண்களுக்கு சுப காரிய முயற்சிகள் கைகூடும். மாணவர்களின் கல்வியில் ஏற்றம் ஏற்படும். கூட்டுத் தொழில் லாபம் தரும். கமிஷன் ஏஜென்சி, காண்ட்ராக்ட் போன்றவை யோகம் கொடுக்கும். அரசியல்வாதிகளின் செல்வம், செல்வாக்கு கூடும்.

அதிர்ஷ்டம் அளிப்பவை:

அதிர்ஷ்ட தேதிகள் : 5, 6, 8.
அதிர்ஷ்ட கிழமை : புதன், சனி.
அதிர்ஷ்ட திசை : மேற்கு.
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை.
அதிர்ஷ்ட தெய்வம் : முருகன், ரங்கநாதர்.

பரிகாரம்:

இந்த குருப் பெயர்ச்சியின் மூலம் குரு பகவான் அஷ்டம ஸ்தானமான 8-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பது சாதகமற்ற அமைப்பு என்பதால், வியாழக் கிழமைகளில் விரதமிருந்து தட்சிணா மூர்த்திக்கு நெய் தீபமேற்றி மஞ்சள் நிற வஸ்திரமும், மஞ்சள் நிறப் பூக்களும் சாற்றி அர்ச்சனை செய்வது நல்லது. சனிக் கிழமைகளில் சனி பகவானுக்கு பரிகாரம் செய்வது, எள் எண்ணெயில் தீபமேற்றி வழிபடுவது மிகவும் உத்தமம். ஏழை- எளியவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது நல்லது.

குருப்பெயர்ச்சி பலன்கள் 2011 (கன்னி)

கன்னி
(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)

பிறரின் குணம் அறிந்து அதற்கேற்றார்போல் வளைந்து கொடுத்து வாழக்கூடிய கன்னி ராசி நேயர்களே! வரும் 8-5-2011 முதல் 17-5-2012 வரை குரு பகவான் உங்கள் ஜென்ம ராசிக்கு அஷ்டம ஸ்தானமான 8-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பது அனு கூலமற்ற அமைப்பாகும். இதனால் பண வரவுகளில் பலவகையில் நெருக்கடிகளைச் சந்திப்பீர்கள். எதிர்பார்க்கும் உதவிகள்கூட தாமதப்படும். நன்றாகப் பழகியவர்கள்கூட ஏதாவது உதவி கேட்பீர் களோ என ஒதுங்கிக் கொள்வார்கள். குரு சாதகமின்றி சஞ்சரிப்பது மட்டுமின்றி உங்களுக்கு ஏழரைச் சனியும் தொடருவதால் எதிலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. குடும்பத்தில் அடிக்கடி கருத்து வேறுபாடுகள் உண்டாகும். திருமண சுபகாரிய முயற்சி களில் தடைகள் ஏற்படும். எடுக்கும் எந்தவொரு காரியத்திலும் தடை, தாமதங்களையே சந்திப்பீர்கள். தொழில், வியாபாரத்தில் போட்டி, பொறாமைகள் அதிகரிக்கும். கூட்டாளி களின் ஒற்றுமை யற்ற செயல்பாட்டால் அபிவிருத்தியும் குறையும். உத்தியோகஸ்தர் களுக்கு பணியில் பிறர் செய்யும் தவறுகளுக்கு பொறுப்பேற்க வேண்டியிருக்கும். உயரதிகாரிகளின் கெடுபிடிகள் மன உளைச்சலை உண்டாக்கும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதைத் தவிர்ப்பது மிகவும் உத்தமம்.

ஆரோக்கியம்:

உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்காது. சிலருக்கு வயிற்றுக் கோளாறு, சரியான உறக்கமின்மை போன்ற அனுகூலமற்றப் பலனைக் கொடுக்கும். மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். குடும்பத் தில் மனைவிக்கு உடல்பாதிப்பு உண்டாகும். மன சந்தோஷம் குறைந்திடும். எதிலும் எச்சரிக்கை தேவை.

பொருளாதார நிலை:

பணப் பற்றாக்குறை தொடர்ந்து இருக்கும். கொடுக்கல்- வாங்கல் திருப்தி கொடுக்காது. பிறருக்கு வாக்குறுதி கொடுப்பது, ஜாமீன் கொடுப்பதைத் தவிர்ப்பது உத்தமம். உங்களால் செலவுகளைக் கட்டுப்படுத்த முடியாது. புதிய செலவுகள் ஏற்படும். சிலருக்கு அசையா சொத்து வகையில் செலவுகள் அதிகரிக்கும்.

குடும்பம்:

கணவன்- மனைவி இடையே ஒற்றுமை குறையும். அலைச்சல் அதிகமாகவே இருக்கும். குடும்பத்தில் சண்டைச் சச்சரவுகள் தோன்றி மறைந்திடும். குடும்பத்தில் எந்த காரியமும் நடைபெறாமல் இழுபறியாகவே செல்லும். ஸ்திரச் சொத்து இழப்பு உண்டாகும். உறவினர்கள் வருகையால் செலவுகள் ஏற்படும்.

உத்தியோகஸ்தர்களுக்கு:

உத்தியோக நிலையில் மேலதிகாரிகளின் கெடுபிடிகள் காணப் படும். வேலைக்கேற்ற உயர்வினை அடையமுடியாது; தடை உண்டாகும். மன அமைதி குறையும். உடல்நலம் பாதித்து அடிக்கடி விடுப்பு எடுத்து பணியில் கவனம் குறையும். புதிய வேலை வாய்ப்பு அமையாது. வெளியூர் பயணங்களால் அலைச்சல், டென்ஷன் யாவும் உண்டாகும்.

தொழிலாளர்களுக்கு:

தகுந்த முதலாளி அமைந்தாலும் பல நிலைகளில் அவரை சந்திக்க முடியாத சூழ்நிலைகள் உண்டாகும். வேலை பாரமும் கூடும். சக தொழிலாளர்களின் ஒத்துழைப்பின்மை ஏற்படும். பொருளாதாரத் தட்டுப்பாடும் காணப்படும். புதிய முதலீடு செய்வதைத் தவிர்க்கவும்.

பெண்களுக்கு:

பணிபுரியும் பெண்களுக்கு வேலைச்சுமை அதிகரிக்கும். கணவன்- மனைவி ஒற்றுமை குறையும். தேக ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் சண்டைச் சச்சரவுகள் அதிகரிக்கும். எதிர்பார்த்த நற்பலன்கள் உண்டாக தடை உண்டாகும்.

கலைஞர்களுக்கு:

வெளியூர் வாய்ப்புகள் பொருளாதாரரீதியில் பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தும். புதிய ஒப்பந்தங்கள் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத நிலை உண்டாகப் பெறும். கடுமையான போட்டி, பொறாமைகளைச் சந்திக்க நேரிடும்.

விவசாயிகளுக்கு:

விளைச்சல் நன்றாகவே இருந்தாலும் பண நெருக்கடியைச் சமாளிக்க முடியாத நிலை உண்டாகும். எதிர்பார்த்த கடனுதவி, புதிய முயற்சிகள் கை கூடாமல் ஏமாற்றம் தரும். பெரிய விவசாயப் பணிகள், கிணறுகள் தோண்டுவது, போர் அமைப்பது போன்ற வற்றைத் தவிர்க்கவும்.

இளைஞர்களுக்கு:

அனுகூலமான வேலையில் இருக்கும் உங்களுக்கு எதிர்பாராத சிக்கல் மூலம் தற்போது உள்ள நிலையில் பிரச்சினை உண்டாகும். நெருங்கிப் பழகியவர்கள் மூலம் வீண்பழி உண்டாகும். எதிர்நீச்சல் போட்டு முன்னேற வேண்டிய காலம் இது.

மாணவர்களுக்கு:

படிப்பின்மீது கவனம் செலுத்தினால் பாராட்டு கிடைக்கும். வெளியில் அதிகம் சுற்றுவதைக் குறைத்துக் கொள்ளுங்கள். மதிப் பெண்கள் திருப்திகரமாக இருக்காது. விளையாட்டில் ஆர்வம் ஏற்படும். வெளியூர் பயணங்களைத் தவிர்ப்பது உத்தமம்.

குரு அஸ்வினி நட்சத்திரத்தில் கேது சாரத்தில்
8-5-2011 முதல் 17-7-2011 வரை சஞ்சாரம்

இக்காலத்தில் உங்களுக்கு உடல் உபாதைகள் ஏற்படவே செய்யும். நீர்தொடர்புள்ள கோளாறுகள் ஏற்படும். பொருளாதார வரவில் மந்தமான நிலையே காணப்படும். செய்யும் தொழிலில் வேலை ஆட்களுக்கும் உங்களுக்கும் இடையில் கருத்து வேறுபாடு உண்டாகும். கணவன்- மனைவி ஒற்றுமை பாதிக்கும். கூட்டுத் தொழிலில் பிரியும் நிலை உருவாகும். வியாபாரத்திலும் லாபம் குறையும். உங்கள் வேலையாட்கள் உங்களை விட்டுப் பிரிந்து செல்லும் நிலை ஏற்படும். எதிரிகளின் பலம் கூடும். விவசாயிகளுக்கு அரசு வழியில் எவ்வித நற்பலனும் அமையாமல் வயல்களை விற்க வேண்டிய சூழல் ஏற்படும். மாணவர்களின் கல்வியில் மிகவும் மந்த மான நிலை ஏற்படும். கலைஞர்களுக்கு பட வாய்ப்புகள் குறையும். உத்தியோகத்தில் வேலைப்பளு கூடி உடல்சோர்வுடன் காணப் படுவார்கள்.

குரு பரணி நட்சத்திரத்தில் சுக்கிரன் சாரத்தில்
18-7-2011 முதல் 30-8-2011 வரை சஞ்சாரம்

இக்காலத்தில் புதிய முயற்சிகளில் அனுகூலப் பலன்கள் கிட்டாது. சகோதர வழியில் சோதனைகளும் கருத்து வேறுபாடு களும் ஏற்படும். குடும்பத்தில் எதிர்பாராத தன விரயம், செலவு உண்டாகும். புத்திரர்களின் வழியிலும் மனக் கவலைகள் ஏற்படும். பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு கடன் பிரச்சினைகள் அதிகரிக் கும். எடுக்கும் எந்த முயற்சியுமே தடையுடன் முடிவடையும். சுப காரியங்கள் குடும்பத்தில் ஏற்பட தடை உண்டாகும். புதிய முயற்சி களிலும் இடையூறுகள் ஏற்படும். உத்தியோகத்திலும் அதிகாரி களால் அனுகூலமற்ற பலன்களே உண்டாகும். மாணவர்கள் கல்வியில் கடினமாக உழைப்பதன் மூலம் மதிப்பெண்களைப் பெற முடியும். குடும்பத்தில் கணவன்- மனைவி உறவு ஒற்றுமை குறைந்து காணப்படும். புதிய விவசாயிகளுக்கு கடன்கள் தொல்லை தரும்.

குரு வக்ரகதியில் 31-8-2011 முதல் 25-12-2011 வரை சஞ்சாரம்

இது பெரிய யோகம் கொடுக்கும் காலம் என்று கூறமுடியாது. தொழில்ரீதியாக போட்டிகளைச் சந்திக்க நேரிடும். தொழிலாளர் களும் வேலை ஆட்களும் தேவையில்லாமல் பிரச்சினை செய் வார்கள். பொருளாதார பற்றாக்குறையினால் கடன்கள் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு கடன் பிரச்சினை அதிகரிக்கும். குடும்ப வாழ்விலும் கணவன்- மனைவி இடையே கருத்து வேறு பாடும் சண்டையும் உண்டாகி மன அமைதி குறையும். வியாபாரம் மந்தமாகவே நடைபெறும். கொடுக்கல்- வாங்கலிலும் சிக்கல்கள் ஏற்படும். அடிக்கடி பயணங்கள் உண்டாகும். எதிரிகளின் பலம் கூடி உங்கள் பலம் குறையும். எனவே அரசியல்வாதிகள் புது முயற்சியைத் தவிர்ப்பது உத்தமம். விவசாயிகளுக்கு புழு, பூச்சிகளின் தொல்லையால் விளைச்சல் பாதிக்கும்.

குரு அஸ்வினி நட்சத்திரத்தில் கேது சாரத்தில்
26-12-2011 முதல் 2-3-2012 வரை சஞ்சாரம்

உங்கள் தேகநலனில் அக்கறை செலுத்த வேண்டும். மனைவி, குழந்தைகளால் மருத்துவச் செலவுகள் ஏற்படும். பொருளாதார ரீதியாக பணப் பற்றாக்குறை ஏற்பட்டு கடன் பிரச்சினைகள் உண்டாகும். தொழிலாளர்களுக்குள் பகை, கருத்து வேறுபாடுகள் போன்றவை உண்டாகும். வியாபாரத்தில் நன்றாக ஈடுபட முடியாத சில சூழ்நிலைகள் உண்டாகும். வீட்டில் அமைதி குறைந்து காணப் படும். கணவன்- மனைவி இருவரும் அடிக்கடி வாய்த் தகராறு செய்ய நேரிடும். குழந்தைகளால் அக்கம்பக்கத்தில் வீண் வாக்கு வாதங்கள் நிகழும். எதிலும் மிகவும் கவனமாகவும் மிகவும் எச்சரிக்கையுடனும் செயல்படுவதால் வீண் விரயம், வீண் விரோதத்தை சற்று குறைக்கலாம். உத்தியோகத்தில் நிம்மதி இருக்காது. மாணவர்களின் ஆர்வம் கல்விமேல் செல்லாது.

குரு பரணி நட்சத்திரத்தில் சுக்கிரன் சாரத்தில்
3-3-2012 முதல் 2-5-2012 வரை சஞ்சாரம்

இக்காலத்திலும் தேக ஆரோக்கியம் பாதிப்பை உண்டாக்கும். புத்திர வழியிலும் பாதிப்பு ஏற்பட்டு மருத்துவச் செலவுகள் ஏற்படும். பெண்களால் சிலருக்கு கெடுபலன்கள் அதிகரிக்கும். செய்யும் தொழி லில் போட்டி, பொறாமைகள் உண்டாகும். வியாபாரத்தில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதைச் சற்று தள்ளிப் போடுவது உத்தமம். கணவன்- மனைவி இடையே பிரச்சினைகள் உருவாகும். உறவினர் களால் பகை ஏற்படும். பெண்களுக்கும் உடல் உபாதைகள் உண்டாகும். அரசியல்வாதிகள் ஊழல் வழக்கில் சிக்கிட நேரும். அதனால் புகழ், கௌரவம் குறையும். மாணவர்களின் கல்வியில் ஆர்வம் குறையும். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கை நழுவும். விவசாயிகளுக்கு கடன்களால் தொல்லையும் பகைவர்களால் விரோதமும் ஏற்பட்டு மனக்கவலை உண்டாகும்.

குரு கிருத்திகை நட்சத்திரத்தில் சூரியன் சாரத்தில்
3-5-2012 முதல் 17-5-2012 வரை சஞ்சாரம்

இக்காலத்தில் தேக ஆரோக்கியம் பாதிக்கும். உஷ்ண சம்பந்த மான நோய்கள் ஏற்படும். உடல் சோர்வும் உண்டாகும். குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் கூடும். புதிய கடன்கள் ஏற்படும். சுப காரியம் நடைபெற பல்வேறு இடையூறுகள் உண்டாகும். செய்யும் தொழில் ரீதியாக அலைச்சலும் டென்ஷனும் உண்டாகும். மனக்கவலை ஏற்படும். கணவன்- மனைவிக்குள் கருத்து வேறுபாடு நிலவும். மனதில் பயம், வீண் குழப்பம் ஏற்படும். உத்தியோகத்தில் மேலதிகாரி களின் கெடுபிடியும், தெரியாத இடத்திற்கு மாற்றமும் உண்டாகும். பெண்களுக்கு மனசஞ்சலம் ஏற்படும். புத்திர வழியில் மனக்கவலை ஏற்படும். அரசியல்வாதிகளின் கௌரவம் குறையும். மாணவர்கள் சற்று மந்தமாகக் காணப்படுவார்கள். கலைஞர்கள் உற்சாகம் குறைந்து காணப்படுவார்கள். விவசாயிகளுக்கு மகசூலில் திருப்தி யற்ற நிலை நிலவும்.

உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு:

தொழில்ரீதியாக அலைச்சல், டென்ஷன் உண்டாகும். போட்டி, பொறாமையும் நெருக்கடிகளும் ஏற்படும். திருமணம் போன்ற சுப காரியங்களில் இடையூறுகள் ஏற்படும். குடும்ப வாழ்வில் ஒற்றுமை குறையும். கலைஞர்களுக்குப் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். வியாபாரத்தில் பெரிய அளவு முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது. கமிஷன் ஏஜென்ஸி, காண்ட்ராக்ட் போன்றவற்றில் எச்சரிக்கையாகச் செயல்பட வேண்டும்.

அஸ்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு:

தேகநலனில் கவனம் தேவை. குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் கூடும். கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடு அதிகரிக் கும். மாணவர்கள் கல்வியில் கடின முயற்சி மேற்கொள்ள வேண்டும். உத்தியோகத்தில் புதுமுயற்சியைத் தவிர்ப்பது நல்லது. கமிஷன் ஏஜென்ஸி, காண்ட்ராக்ட் போன்றவை லாபம் தராது. பெண் களுக்கு இல்வாழ்வில் சோதனைகள் நிறைந்திருக்கும். கொடுக்கல்- வாங்கலில் சிக்கல் ஏற்படும்.

சித்திரை 1, 2-ஆம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு:

சுபகாரிய முயற்சிகளில் தடை, தாமதம் உண்டாகும். பிறருக்கு வாக்குறுதி கொடுப்பது- ஜாமீன் கொடுப்பது போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது. புத்திர வழியில் செலவுகள் ஏற்படும். தொழில், வியாபாரம் இவற்றில் லாபங்கள் குறைந்து விரயம் உண்டாகும். மறைமுக எதிர்ப்புகள் இருக்கும். குடும்பத்தில் அமைதி குறையும். கலைஞர்களுக்கு இருக்கும் வாய்ப்புகள் கை நழுவும்.

அதிர்ஷ்டம் அளிப்பவை:

அதிர்ஷ்ட தேதி: 5, 9, 14, 18, 23, 27.
அதிர்ஷ்ட கிழமை: செவ்வாய், புதன்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, சிவப்பு.
அதிர்ஷ்ட கல்: மரகதம்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு.
அதிர்ஷ்ட தெய்வம்: விஷ்ணு.

பரிகாரம்:

இந்த குருப்பெயர்ச்சியால் குரு பகவான் 8-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் வியாழக் கிழமைதோறும் தட்சிணா மூர்த்திக்கு கொண்டைக் கடலை மாலையும், மஞ்சள் நிற பூக்களும் சாற்றி நெய் தீபமேற்றுவது உத்தமம். ஏழரைச் சனியும் தொடரு வதால் சனிக்கு எள் எண்ணெயில் தீபமேற்றி நீலநிற சங்குப் பூக்களால் அர்ச்சனை செய்யவும். முடிந்தால் சனிக்கு பரிகார ஸ்தல மான திருநள்ளாறு சென்று வருவதும் நல்லது.

குருப்பெயர்ச்சி பலன்கள் 2011 (சிம்மம்)

சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)

எதிலும் தனித்து நின்று போராடி வெற்றி பெறக்கூடிய ஆற்றல் கொண்ட சிம்ம ராசி நேயர்களே! கடந்த சில ஆண்டுகளாக ஏழரைச் சனி நடைபெறுவதால் சோதனைகளையும், வேதனைகளையும் சந்தித்து வரும் உங்களுக்கு, வரும் 8-5-2011-ல் ஏற்படவிருக்கும் குருப் பெயர்ச்சியால் குரு பகவான் பாக்கிய ஸ்தானமான 9-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பது அற்புத அமைப்பாகும். குடும்பச் சூழ்நிலை யானது மிகவும் மகிழ்ச்சிகரமானதாக மாறும். தடைப்பட்ட மங்கள கரமான திருமண சுப காரியங்கள் இனிதே தடபுடலாக நிறை வேறும். சிலர் அழகான பிள்ளைச் செல்வத்தையும் பெறுவர். பணப் புழக்கம் சிறப்பாக இருப்பதால் கொடுக்கல்- வாங்கலிலும் நல்ல லாபமும் பல பெரிய மனிதர்களின் நட்பும் கிட்டும். வெளிவட்டார பழக்க- வழக்கங்கள் விரிவடையும். வரும் 15-11-2011-ல் உங்களைத் தொடர்ந்து கொண்டிருக்கும் ஏழரைச் சனியும் முழுமையாக முடிவ டைந்து விடுவதால் உங்களது துன்பங்கள் அனைத்தும் பகல வனைக் கண்ட பனிபோல விலகும். தொழில், வியாபாரத்தில் புதிய புதிய முயற்சிகளில் வெற்றியைக் காண்பீர்கள். கூட்டாளிகளாலும் அனுகூலம் உண்டு. உத்தியோகஸ்தர்கள் கௌரவமான பதவிகளைப் பெற்று மகிழ்ச்சி அடைவார்கள். வீடு, மனை, வண்டி வாகனங்கள் வாங்கக்கூடிய யோகம், பொன், பொருள், ஆடை, ஆபரணச் சேர்க்கை யாவும் மிகச் சிறப்பாக அமையும்.

ஆரோக்கியம்:

உங்கள் ஆரோக்கியம் மிகவும் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் புத்திர வழியில் உண்டாகிய மருத்துவச் செலவுகள் மறையும். உங்கள் வலிமையும் வளமும் கூடும். நீண்ட நாட்களாக வராமல் இருந்த பூர்வீகச் சொத்து கிடைப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். வெளியூர் பயணங்களாலும் மகிழ்ச்சி உண்டாகும்.

பொருளாதார நிலை:

பொருளாதார வளர்ச்சியில் தன்னிறைவையும் சேமிப்பையும் உண்டாக்கும். பழைய கடன்கள் அடைபடும். வழக்கு விவகாரங் களில் உங்களுக்குச் சாதகமான நிலை ஏற்படும். சொத்து வகையில் லாபங்களும் அரசாங்க வகையில் அனுகூலங்களும் தனரீதியில் சாதகமான பலன்களும் உண்டாகும்.

குடும்பம்:

கணவன்- மனைவி இடையே சிறப்பான ஒற்றுமை காணப்படும். எதிர்பாராத சாதனை செய்வீர்கள். பிள்ளைகள் வழியில் பூரிப்பைக் கொடுக்கும். உறவினர்களும் நண்பர்களும் ஆதரவாக இருப்பார்கள். புதிய வீடு, வாகனம் வாங்கும் யோகமும் அரசு வழியில் ஆதாயமும் கிடைக்கக்கூடும். புதிய முயற்சி வெற்றியைக் கொடுக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு:

திட்டமிட்ட செயல்கள் மூலம் சிறப்பான சாதனை செய்வீர்கள். வேலைப் பளு குறையும். அதிகாரிகளின் பாராட்டும் சக ஊழியர் களின் ஆதரவும் மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும். உங்கள் உத்தியோக நிலையில் மிகவும் சிறப்பான பதவி உயர்வு, ஊதிய உயர்வுகளும் அமையப் பெறும். கௌரவமான பதவிகளையும் சிலர் அடை வார்கள். வெளியூர் பயணம் ஏற்றம் தரும்.

தொழிலாளர்களுக்கு:

தொழில்ரீதியாக இருந்து வந்த போட்டி, பூசல்கள் யாவும் விலகி மிகவும் உயர்வான நற்பலன்கள் உண்டாகும். அதிக முதலீடு செய்து தொழிலை துணிந்து விரிவுபடுத்தலாம். வெற்றியும் லாபமும் ஏற்படும். உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கப் பெறும்.

பெண்களுக்கு:

குடும்பத்தில் சுபகாரியச் செலவுகள் ஏற்படும். உறவினர் வருகை யால் மன நிம்மதி உண்டாகும். எதிர்பார்க்கும் தகவல் நற்பலனை அளிக்கும். ஆடை, ஆபரணச் சேர்க்கை அற்புதமாகவே அமையும். கணவன்- மனைவி இடையே ஒற்றுமை பெருகும்.

கலைஞர்களுக்கு:

வருமானம் நன்றாக இருக்கும். புதிய புதிய வாய்ப்புகள் கிடைக் கும். உங்களின் பெயர், புகழ் கூடும். ரசிகர்களின் ஆதரவும் இருக்கும். வெளியூர், வெளிநாட்டுப் பயணங்களால் லாபமும் பொருள் வரவும் உண்டாகும்.

விவசாயிகளுக்கு:

எதிர்பார்த்த விளைச்சல் ஏற்றத்தை உண்டாக்கும். எதிர்பார்த்த உதவிகள் பெறுவீர்கள். அதனால் பல திட்டங்கள் நிறைவேறும். விவசாயத்திற்குத் தேவையான நவீன கருவிகள் வாங்குவீர்கள். விளை பொருட்கள் சிறப்பான விலைக்குப் போவதால் உங்களது கடன் உடனடியாக விலகும்.

இளைஞர்களுக்கு:

வேலை வாய்ப்புகள் கிடைக்கப் பெறும். தன வரவுகள் தாராள மாகக் காணப்படும். பெற்றோரின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். உடன்பிறந்தவர்களால் ஏற்றமும் உயர்வும் உண்டாகும். சொன்ன சொல்லைக் காப்பாற்ற முடியும்.

மாணவர்களுக்கு:

கல்வியில் நல்ல ஊக்கமும் உற்சாகமும் உயர்ந்த மதிப்பெண்களும் பெற்று, பெற்றோர் மற்றும் ஆசிரியர் பாராட்டையும் பெறுவீர்கள். மேற்கல்வி முயற்சிகளில் வெற்றிமேல் வெற்றி கிட்டும். சிலருக்கு அரசு உதவி பெற்று வெளியூர், வெளிநாடுகளில் தங்கிப் படிக்கும் யோகம் அமையும்.

குரு அஸ்வினி நட்சத்திரத்தில் கேது சாரத்தில்
8-5-2011 முதல் 17-7-2011 வரை சஞ்சாரம்

உங்களுக்கு வெற்றிமேல் வெற்றி கொடுக்கக்கூடிய காலமாகும். உங்களின் கௌரவம், புகழ் யாவும் கூடும். புத்திரர்கள் வழியில் பூரிப்பும் மகிழ்ச்சியும் உண்டாகும். சிலருக்கு வாகனம் வாங்குதல், வீடு மாற்றுதல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும். நீங்கள் எடுக்கக் கூடிய முயற்சிகள் பரிபூரண வெற்றியைக் கொடுக்கும். உங்கள் ஆரோக்கியம் திருப்திகரமாகக் காணப்படும். உங்கள் சகோதரர்கள் அனுகூலமாக இருப்பார்கள். அரசு வழியில் உதவிகள் திடீரென்று அமையப் பெறும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் சிறப்பாகக் கைகூடி மனமகிழ்வை ஏற்படுத்தும். மக்கட்பேறு இல்லாதவர்களுக்கு மக்கட்பேறு கிடைத்து மகிழ்ச்சி உண்டாகும். செய்கின்ற தொழில், வியாபாரத்தில் நல்ல மேன்மையும் அபிவிருத்தியும் ஏற்படும். கூட்டுத் தொழில் யோகம் கொடுக்கும்.

குரு பரணி நட்சத்திரத்தில் சுக்கிரன் சாரத்தில்
18-7-2011 முதல் 30-8-2011 வரை சஞ்சாரம்

இக்காலமும் உங்களுக்கு சிறப்பான பலன்களை உண்டாக்கும். உங்களின் வலிமை, வல்லமை யாவும் சிறப்பாகவே இருக்கும். எதிரி களின் பலம் குறையும். உங்களுக்கு வெற்றிகள் குவிந்தபடியே இருக்கும். செய்யும் தொழிலில் பெரிய அளவு முதலீடுகளைச் செய்து லாபத்தைப் பெருக்குவீர்கள். உறவினர், நண்பர்கள் அனுகூலமாக இருப்பார்கள். அரசியல்வாதிகள் இழந்த பதவியை மீண்டும் பெறு வார்கள். புதிய சொத்துகள் வாங்கும் அமைப்பும் உண்டாகும். குடும் பத்தில் சுபிட்சமான நற்பலன்கள் அமையப் பெறும். பெண்களுக்கு ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். விவசாயிகளுக்கு மகசூல் எதிர்பார்த்த அளவுக்குமேல் இருக்கும். மாணவர்கள் கல்வியிலும் விளையாட்டிலும் வெற்றிமேல் வெற்றி பெறுவார்கள். கலைஞர் களுக்கு சிறப்பான வாய்ப்புகளால் அற்புதமான தன வரவுகள் உண்டாகும்.

குரு வக்ரகதியில் 31-8-2011 முதல் 25-12-2011 வரை சஞ்சாரம்

உங்கள் தேக ஆரோக்கியம் அவ்வளவு சிறப்பாக இருக்காது. எதிலும் அமைதியற்ற போக்கும் அலைச்சலும் உண்டாகும். குடும் பத்தில் கணவன்- மனைவி இடையே வீண் சண்டை, சச்சரவுகள் ஏற்பட்டபடியே இருக்கும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகை களில் எச்சரிக்கையாகச் செயல்பட வேண்டும். எடுத்த காரியத்தில் தடையினை ஏற்படுத்தும். கலைஞர்களுக்கு எதிர்பார்க்கும் பட வாய்ப்பு கிடைக்காது. மாணவர்களின் கல்வியில் ஈடுபாடு குறையும். செய்கின்ற தொழில், வியாபாரத்தில் போட்டி, பொறாமைகள் அதிகரிக்கும். கூட்டுத் தொழிலில் கருத்து வேறுபாடு தோன்றி பிரிவினை உண்டாகும். அரசியல்வாதிகளின் பெயர், புகழ் குறையும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் தடை, தாமதம் உண்டாகும். பணிபுரியும் பெண்களுக்கு வேலையில் மன நிம்மதி குறைந்து காணப்படும்.

குரு அஸ்வினி நட்சத்திரத்தில் கேது சாரத்தில்
26-12-2011 முதல் 2-3-2012 வரை சஞ்சாரம்

உங்கள் முயற்சிகள் வெற்றியைக் கொடுக்கும். பொருளாதார ரீதியில் உயர்வுகள், புதிய முயற்சிகளுக்கு செயல் வடிவம் கொடுக்கும் அமைப்பும் உண்டாகும். அரசு மூலம் வெகுமானம் கிட்டும். ஒரு நல்ல குறிக்கோளுக்காக புண்ணிய ஸ்தலப் பயணமும் மேற் கொள்ளும் அமைப்பு ஏற்படும். வியாபார சம்பந்தமான வெளி நாட்டுப் பயணமும் ஏற்படும். சுக வாழ்க்கைக்குத் தேவையான பொருள்கள் யாவும் வீட்டில் நிறைந்திடும். குடும்ப வாழ்வில் பூரிப்பும் மகிழ்ச்சியும் உண்டாகும். கணவன்- மனைவிக்குள் மிக அன்னியோன்ய நிலை அமையப் பெறும். புத்திர வழியில் பூரிப்பும் மகிழ்ச்சியும் மாறி மாறி ஏற்படும். மாணவர்கள் கல்வியில் நல்ல வளர்ச்சி காண்பார்கள். உங்களின் செல்வம், செல்வாக்கு, பெயர், புகழ் யாவும் கூடும் காலமாகும்.

குரு பரணி நட்சத்திரத்தில் சுக்கிரன் சாரத்தில்
3-3-2012 முதல் 2-5-2012 வரை சஞ்சாரம்

உங்களின் தேக ஆரோக்கியம் நன்றாகவே இருக்கும். உங்களுக்கு செய்யும் தொழில் சிறப்பாக இருக்கும். நண்பர்கள் உதவி சாதகமாக இருக்கும். புதிய சொத்து வாங்கும் அமைப்பு உண்டாகும். குடும் பத்தில் சுபிட்சமான நற்பலன்கள் அமையப் பெறும். புதிய தொழில் இக்காலத்தில் தொடங்கலாம். எடுக்கும் காரியத்தில் வெற்றிமேல் வெற்றி உண்டாகும். சிலருக்கு எதிர்பாராத தன வரவு உண்டாகி மன மகிழ்வை ஏற்படுத்தும். குடும்பத்தில் கணவன்- மனைவி உறவு கள் மிகவும் நன்றாகவே இருக்கும். வியாபாரிகளுக்கு நல்ல முன்னேற்றமும் மேன்மையும் உண்டாகும். நண்பர்கள் வகையில் சகாயமும் முன்னேற்றமும் உண்டாகும். கமிஷன் ஏஜென்ஸி, காண்ட்ராக்ட் போன்ற துறையில் இருப்போர் சுபிட்சமான நற்பலன்களைப் பெறுவார்கள். விவசாயத்தில் லாபம் பெருகும்.

குரு கிருத்திகை நட்சத்திரத்தில் சூரியன் சாரத்தில்
3-5-2012 முதல் 17-5-2012 வரை சஞ்சாரம்

உங்களின் தேகநிலை சிறப்பாகவே இருக்கும். உங்கள் செல்வம், செல்வாக்கு, புகழ், பெருமை யாவும் இக்காலத்தில் மிகச் சிறப் பாகவே இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு திடீர் தனச் சேர்க்கை, லாபம் போன்றவை ஏற்படும். குடும்பத்தில் சேமிப்பு நிலை பெருகும். கணவன்- மனைவி ஒற்றுமை அற்புதமாகவே இருக்கும். பிள்ளை களால் பூரிப்பும் மகிழ்ச்சியும் நற்பெயரும் பெற்றோர்களுக்கு கிடைக்கும். பொருளாதாரம் எந்த வழியிலாவது பெருகும். வீட்டுக்கு வேண்டிய தட்டுமுட்டுச் சமான்களும் வண்டி வாகனங்களும் அமையும். கமிஷன் ஏஜென்ஸி, காண்ட்ராக்ட் போன்ற தொழில் செய்வோருக்கு லாபம் ஏற்படும். கூட்டுத் தொழிலில் நல்ல மேன்மையும் அபிவிருத்தியும் உண்டாகும். உறவினர், நண்பர்கள் அனுகூலமாக இருப்பார்கள்.

மக நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு:

செய்யும் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். உங்கள் பொருள் சந்தையில் பெயர், புகழ் பெறும்; லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் விரும்பிய பதவி கிடைக்கப் பெறும். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும்; குடும்பத்தில் அமைதியும் சந்தோஷமும் உருவாகும். கொடுக்கல்- வாங்கல் யோகம் கொடுக்கும். மாணவர்கள் கல்வியில் வெற்றிமேல் வெற்றி பெறுவர்.

பூர நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு:

உடல்நிலை சிறப்பாகவே இருக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றி புகழ் பெறுவீர்கள். உறவினர்களின் வருகையால் நன்மை உண்டாகும். கூட்டுத் தொழிலில் வெற்றி கிட்டும். புத்திர வழியில் பூரிப்பும் பெருமையும் உண்டாகும். அரசியல்வாதிகளின் புகழ், பெருமை, செல்வம், செல்வாக்கு யாவும் கூடும். குடும்பத்தில் கணவன்- மனைவி இடையே ஒற்றுமை பெருகும். சுப காரியங்கள் நினைத்தபடியே கைகூடி மன மகிழ்வை ஏற்படுத்தும்.

உத்திரம் 1-ஆம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு:

உங்களின் தேகநலன் நன்றாகவே இருக்கும். கூட்டுத் தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வும் ஊதிய உயர்வும் தேடிவந்து அமையும். அரசியல்வாதிகளின் பெயர், புகழ் கூடும். திருமணம் போன்ற சுப காரியங்கள் சிறப்பாக கைகூடும். பெண்களின் அபிலாஷைகள் யாவும் பூர்த்தி அடையும். மாண வர்கள் கல்வியில் வெற்றிமேல் வெற்றி பெறுவார்கள். விவசாயிகள் லாபம் அடைவார்கள்.

அதிர்ஷ்டம் அளிப்பவை:

அதிர்ஷ்ட தேதி : 1, 10, 19, 28.
அதிர்ஷ்ட கிழமை: ஞாயிறு.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு.
அதிர்ஷ்ட கல்: மாணிக்கம்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு.
அதிர்ஷ்ட தெய்வம்: சிவன்.

பரிகாரம்:

இந்த குருப்பெயர்ச்சியின் மூலம் குரு பகவான் சாதகமாக சஞ்சரித்தாலும், வரும் 15-11-2011 வரை ஏழரைச் சனி தொடருவதால் சனி பகவானுக்கு சனிக் கிழமைகளில் கறுப்புநிற வஸ்திரமும் நீல நிற சங்குப் பூக்களும் சாற்றி, எள் எண்ணெயில் தீபமேற்றி வழிபாடு செய்வது நல்லது. ஆஞ்சனேயரை வழிபடுவதும், ஊனமுற்ற ஏழைகளுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வதும் உத்தமம்.